Apr 27, 2016

பிஞ்சுகள் செய்த தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டை மூலம் புதிய முறையில் 100 சதவிகிதம் ஒட்டு பதிவிற்கு வாக்காளர் விழிப்புணர்வு.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிய முறையில் தபால் மூலம் தேர்தல் தகவல் குறித்து கார்டு எழுதி பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவிகித ஒட்டு பதிவிற்கான வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தபால் அட்டை வாயிலாக தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

100 சதவிகித  தேர்தல் ஒட்டு போடுவதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்வுகளை செ ய்து வருகிறது.இதன் அடிப்படையில் பள்ளிதலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தங்கள் பெற்றோருக்கும்,அதே வகுப்பில் பயிலும் மற்ற மாணவ நண்பர்களின் பெற்றோர்கள் வீட்டு முகவரிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை வழியாக அனைத்து பெற்றோர்க்கும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ,"விலை மதிப்பில்லா வாக்கினை மறவாதீர் ,அனைவரும் 100% வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை வலுபடுத்துங்கள் " தேர்தல் நாள் மே -16 என்கிற வாசகத்தை அட்டையில் எழுத வலியுறுத்தினார்.அதன் அடிப்படையில் தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேஸ்வரி,கிராம நிருவாக அலுவலர்கள்  சந்திரசேகர்,பெருமாள் ஆகியோர் பள்ளிக்கு வந்து அனைத்து மாணவர்களும் தபால் அட்டையில் எழுதி உள்ளதை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் உள்ள பிஞ்சு குழந்தைகள் வழியாக அவர்களது பெற்றோர்களுக்கும்,அவர்களது வகுப்பு  நண்பர்கள் பெற்றோர்களுக்கும் ,உற்றார் ,உறவினர் அனைவருக்கும் 100 சதவிகித ஒட்டு பதிவை வலியுறுத்தி புதிய முறையில் தபால் அட்டை வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.