ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை: நிதி மசோதாவில் திருத்தம்.
ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கான அதிகபட்ச உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக மாற்றுவதற்கான திருத்தம் உள்பட நிதி மசோதாவில் 40 திருத்தங்களை மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. இது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாகும்.